மதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்
மதுரை புத்தகக் கண்காட்சியில்
காலச்சுவடு புதிய வெளியீடுகள்
நாவல்
அஞ்சுவண்ணம் தெரு
தோப்பில் முஹம்மது மீரான்
ரூ. 300
உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப் போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார்.
இப்படியான வாழ்வின் அலைவுறும் பிம்பமே ‘அஞ்சுவண்ணம் தெரு.’
- களந்தை பீர்முகம்மது
அன்பே ஆரமுதே
தி. ஜானகிராமன்
ரூ. 500
ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவறம் பூண்டு ஓடுகிறார். சன்னியாசியாக அலைகிறார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார். இந்தக் கால ஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும் உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது நாவல். இளமையில் விலகிப்போன இருவர் முதுமையில் மணமுடிக்காத தம்பதியராகவும் பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் மாறும் அதிசயமே கதையின் மையம். அதைக் கலைப் பண்புகள் துலங்க தி. ஜானகிராமனின் தேர்ந்த கை இழைத்திருக்கிறது. இன்று எழுதப்பட வேண்டிய கதையை அரை நூற்றாண்டுக்கும் முன்னரே அவரது படைப்பு மனம் யோசித்திருக்கிறது.
ஆகாயத்தாமரை
அசோகமித்திரன்
ரூ. 190
படித்துக்கொண்டிருக்கும்போது தாளும் எழுத்துக்களும் மறைந்து புனைவின் காட்சிகள் மனத் திரையில் புலனாக, காதருகே ஒரு குரல் மிருதுவாகப் பேசுவதுபோன்ற உணர்வைத் தரும் அசோகமித்திரனின் சித்தரிப்பு ரசவாதம் இந்த நாவலிலும் கச்சிதமாக அமைந்துள்ளது.
- அரவிந்தன்
சிறுகதை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
லாவண்யா சுந்தரராஜன்
ரூ. 150
மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக்கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள்.
தன்வரலாறு
ஒரு சிற்பியின் சுயசரிதை
எஸ். தனபால்
(ப---ர்): கிருஷ்ணபிரபு
ரூ. 180
ஒரு கலைஞரின் தன் வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் சமூக, அரசியல், கலைப் பின்புலங்களையும் அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் முன்வைக்கிறது தனபாலின் இந்த நூல்.
கட்டுரை
ஆற்றூர் ரவிவர்மா:
கவிமொழி மனமொழி மறுமொழி
(தொ-ர்): சுகுமாரன்
ரூ. 80
ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற்றிய கவிதைகளும் அவருடைய தமிழ்ப் பார்வையும் அவர் மீதான தமிழ்ப் பார்வையும் கொண்ட கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. மலையாள மொழியின் தமிழ்க் காதலருக்கான காணிக்கை இந்நூல்.
நாள்: 30.08.2019 முதல் 09.09.2019 வரை ; இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
தொடர்புக்கு: அய்யாசாமி 9677778865 ; முத்து 9677778862