புத்தகக் கண்காட்சி 2019
ஈரோடு புத்தகக் கண்காட்சி 2019
அரங்கு எண் - 47,48,49
நாள்: 02.08.2019 முதல் 13.08.2019 வரை
நேரம்: காலை 11 முதல் இரவு 9.30 வரை
இடம்: வ.உ.சி பூங்கா
தொடர்புக்கு: அய்யாசாமி – 9677778865
ஈரோடு புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு புதிய வெளியீடுகள்
அனலில் வேகும் நகரம்
(நாடகம்)
கிரீஷ் கார்னாட்
தமிழில்: பாவண்ணன்
ரூ. 125
ஒரு நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறைமையையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். செல்வந்தர்கள், ஏழைகள் என்னும் நிலைகளைக் கடந்து கசப்புகள், ஏமாற்றங்கள், தந்திரங்கள், நடிப்புகள் என அனைத்தும் எல்லோருடைய ஆழத்தில் உறைந்திருப்பதை நாடகம் சித்தரிக்கிறது. அனலில் கொதியேறும் தண்ணீர்க் குடங்களைப்போல எல்லோருமே ஏதோ ஒன்றைத் தேடியலைந்து நிராசைகளையும் வெறுப்புகளையும் நெருப்பெனச் சுமந்து, அந்த அனலிலேயே வெந்து வெந்து சாம்பலாகிப் போகிறார்கள். ‘இனிது இனிது நகரம் இனிது’ என்னும் குரலும் ‘கொடிது கொடிது நகரம் கொடிது’ என்னும் குரலும் இணைந்தே எங்கெங்கும் ஒலிக்கின்றன. தடைகளென இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்க்கிற அரசாங்கச்சட்டத்தைப் போல வாழ்க்கைச்சக்கரம் எல்லோர் மீதும் ஏறி நசுக்கிக் கூழாக்கியபடி ஓடிக்கொண்டே இருக்கிறது.
திருமண ஆல்பம்
(நாடகம்)
கிரீஷ் கார்னாட்
தமிழில்: பாவண்ணன்
ரூ. 160
ஒரு சூதாட்டத்துக்குரிய தந்திரங்களோடும் பேராசைகளோடும் நிகழும் திருமணங்கள் ஏராளம். இரு உள்ளங்கள் இணைந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இனிய தருணத்தை, அவர்களைச் சூழ்ந்து நெருங்கியிருக்கும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளும் சினமும் வன்மங்களும் கசப்புகளும் பொருளற்றதாக ஆக்கிவிடுகின்றன. திருமணத்தைவிட திருமணத்துக்காக சேர்ந்திருப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமானவையாகக் கருதப்படும் அபத்தம் நிகழ்கின்றது. அவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முன்வைக்கிறது கிரீஷ் கார்னாடின் ‘திருமண ஆல்பம்’. பசுமையான நினைவைத் தூண்டும் நிழற்படங்களின் தொகுப்பாக அமையவேண்டிய திருமண ஆல்பம் நிராசைகள், ஆணவங்கள், பெருமூச்சுகள், ஏமாற்றங்களின் தொகுப்பாக மாறிவிடுகின்றது.
கூனன் தோப்பு
தோப்பில் முஹம்மது மீரான்
ரூ. 325
விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெளிப்படுத்துகிறார். அறிந்தவற்றை மட்டுமே சொல்வதும் ஒரு தமிழ் அதிசயம்தான். வாழ்வின் சகல மண்டலங்களையும் கற்பனையின் வீச்சில் அள்ளலாம் என்று, கள ஆராய்ச்சிகளுக்கு அகப்படாத வாழ்க்கைச் சூட்சுமங்கள் எதுவும் இல்லை என்று கொள்ளும் நம்பிக்கைக்கு எதிர்நிலை இது. மீரானின் அனுபவ உலகம் பொதுவான தமிழ்ப் படைப்புகளின் தரங்களுக்கு அப்பால் கரடுமுரடானது. முள்ளும் புதரும் விஷச் செடிகளும் கொண்ட காடு போல் கிடக்கிறது அது. ஆனால், முட்செடிகளும் பூக்கின்றன. பூக்களைச் சொல்ல முட்களை மறைக்க வேண்டியதில்லை. அறிந்துகொள்ள வேண்டிய மனிதத் தேவையின் முன் பூக்களுக்கு நிகரான இடம் முட்களுக்கும் உண்டு. நம் பொய்முகங்களுக்கு இவர் எழுத்து மூலம் ஒரு சில அடிகளேனும் விழுந்திருக்கின்றன. அந்த அளவுக்கு நல்லது.
பிடுங்கி எடுக்கும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவாலின் முன் இணைந்தும் பகிர்ந்தும் வாழ எவ்வளவோ நியாயங்கள் மனித ஜீவன்களுக்கு இருந்தும்கூட, பிரிவுகளில் அவை சரிந்து கிடக்கும் நிலை இவருக்கு விசனம் தருகிறது. ஜாதி, மதம், வாழ்நிலை ஏற்றத்தாழ்வுகள் என எண்ணற்ற பிரிவுகள். இதற்கு மேல் புலப்படாத மனப் பிரிவுகளும் இருக்கின்றன. இவை சார்ந்த உள்போதம் இவருக்கு இருக்கிறது. அத்துடன் தத்துவவாதிகளின் சமூகக் கருத்துகளை நிரூபித்துக் காட்ட இவர் தன் அனுபவங்களைப் பயன்படுத்துவதில்லை. தன் அனுபவங்களைக் கலைரீதியான பரிசோதனைக்கு இவர் உட்படுத்தும்போது மேலெழுந்துவரும் உணர்வுகள் மனித உரிமைகள் மீது இவர் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான உணர்வுகளை உள்ளடக்கிய படைப்புதான் முற்போக்கு இலக்கியத்தின் அசல் என்று சொல்ல வேண்டும்.
- சுந்தர ராமசாமி
மதுரை புத்தகக் கண்காட்சி 2019
நாள்: 30.08.2019 முதல் 09.09.2019 வரை
நேரம்: காலை 11 முதல் இரவு 9 வரை
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
தொடர்புக்கு: அய்யாசாமி - 9677778865, முத்து – 9677778862
மதுரை புத்தகக் கண்காட்சியில் தோப்பில் முஹம்மது மீரான் நாவல்கள்
1. துறைமுகம்
2. அஞ்சுவண்ணம் தெரு