புறப்பொருள் வெண்பாமாலை: உ.வே.சா. பதிப்பும் வியப்பும்
கட்டுரை
புறப்பொருள் வெண்பாமாலை: உ.வே.சா. பதிப்பும் வியப்பும்
பெருமாள்முருகன்
உ.வே. சாமிநாதையரை நினைத்து வியப்பதற்கு அவ்வப்போது ஏதாவது காரணம் எனக்குக் கிடைத்துவிடும். இப்போது ஒன்றல்ல, தொடர்ந்து மூன்று காரணங்கள். ஆ.இரா. வேங்கடாசலபதியின் பதிப்பில் ‘உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் (1877 - 1900) தொகுதி ஒன்று’ வெளியாகிச் சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அந்நூலை முன்வைத்து ஆய்வுக் கட்டுரை (‘கடிதக் கருவூலம்: மூலபாட ஆய்வுக்கான உரையாடல்’ காலச்சுவடு, டிசம்பர் 2018) ஒன்றை உற்சாகத்தோடு எழுதினேன்.
அவர் தம் ஆசிரியரைப் பற்றி எழுதிய ‘மகா