மரணத்துக்கு அப்பாலும்
மரணத்துக்கு அப்பாலும்
சுகுமாரன்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் அவரது புகழும் செல்வாக்கும் தொடர்கின்றன. வாழ்ந்த காலத்தில் பெற்ற பிரபலத்துக்குச் சற்றும் குறையாத வாசக வரவேற்பைத் தொடர்ந்து பெற்றுவருகிறார். அண்மையில் வெளியாகியுள்ள மார்க்கேசின் இதழியல் எழுத்துக்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பான ‘தி ஸ்கேண்டல் ஆஃப் த சென்சுரி’ (The Scandal of the century and other writings), அவரது சொந்த மண்ணான அரக்காடாக்கா (அதன் இலக்கியப் பெயர் – மகோந்தா) கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் நண்பர்களும் சொல்லும் அவரைப் பற்றிய வாய்மொழி வரலாற்று நூலான ‘சாலிட்டியூட் அண்ட் கம்பெனி’ (Solitude & comp