என்று தணியும் இடஒதுக்கீட்டுத் தாகம்?
கட்டுரை
என்று தணியும் இடஒதுக்கீட்டுத் தாகம்?
க. திருநாவுக்கரசு
“சாதி விஷயத்தில் நாம் வேடதாரிகளாக இருக்குமளவிற்கு அநேகமாக வேறெந்த விஷயத்திலும் நாம் வேடதாரிகளாக இருப்பதில்லை. நம்முள்ளிருக்கும் அதிகபட்ச கேவலத்தை அவமானகரமான அளவிற்கு எளிதாகச் சாதி வெளிக்கொண்டுவருமளவிற்கு வேறெந்த விஷயமும் வெளிக்கொண்டுவருவதில்லை” என்று சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமைப் போராளியும், இந்தியாவின் முக்கியமான அறிவுஜீவிகளில் ஒருவருமான காலஞ்சென்ற கே. பாலகோபால் எழுதினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தபோது, அது வட இந்தியாவில் முற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர