'ஸ்பாரோ' இலக்கிய விருது
‘ஸ்பாரோ’ இலக்கிய விருது 2019
‘ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது’ தேர்வுக் குழு (அரவிந்தன், அம்பை, டாக்டர். சரஞ்சித் கௌர்) இந்த ஆண்டு கவிதை வகைமையைக் எடுத்துக்கொண்டது. தமிழுக்கு இரு விருதுகளும் பிற மொழிக்கு ஒரு விருதும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்த எழுத்தாளருக்கும் இன்னொரு விருது சிறப்பான எழுத்தை வழங்கிய இளம் எழுத்தாளருக்கும் வழங்கப்படுகின்றன. தமிழில் கவிதை வகைமைக்கு சிறப்புச் சேர்த்த எம். யுவனின் (யுவன் சந்திரசேகர்) பல்லாண்டுக் கவிதைப் பங்களிப்புக்கும் மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் எழுதிவரும் கீதா சுகுமாரனுக்கும் ஸ்பாரோ - ஆர். தியாகராஜன் விருது 2019 வழங்கப்படுகின்றது. வேற்றுமொழி விருதுக்கு பஞ்சாபி மொழி தேர்ந்தெடுக்கப்பட்டது; ஆழமும் நுண்ணுணர்வும் கூடிய கவிதைகளை எழுதி பஞ்சாபி மொழி இலக்கியத்தில் தனக்கென இடம் பெற்றிருக்கும் ஸிம்ரத் ககனுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து எழுத்தாளர்களும் விருதுகளை ஏற்று ஸ்பாரோவையும் தேர்வுக் குழுவையும் கௌரவப்படுத்தியுள்ளார்கள். விருது விழா இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும்.