ஒரு காதல் கதை
கதை
ஒரு காதல் கதை
வண்ணநிலவன்
ஓவியம்: மணிவண்ணன்
சுத்தமல்லி பஸ் புறப்படுகிறவரை அவன் அவளுக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தான். அது வழக்கம்தான். ஆனால் மாரிச் செல்விக்குத்தான் பஸ் புறப்படுகிறவரை திக்... திக்... என்றிருந்தது. அவனோடு அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டு நாலைந்து மாதத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவளுக்குப் பயம் போகவில்லை; என்றாவது ஒருநாள் தெரிந்தவர்கள் யாராவது பார்க்கத்தான் போகிறார்கள். விஷயம் வீட்டுக்குத் தெரியத்தான் போகிறது. அதற்குப் பிறகு என்னவாகும் என்பதை யோசித்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை. இந்த பஸ்ஸையாவது உடனே நகர்த்துகிறார்களா? திருநெல்வே