என் மீதான கொலை
உயிர்த்த ஞாயிறு
பலியும் பழியும்
கட்டுரை
என் மீதான கொலை
அனார்
என் முன்தான் நிகழ்கின்றது என் மீதான கொலை’ என்ற வரியை அன்று எழுதும்போது என் மண்ணில் உயிர்கள் பலியாகிக்கொண்டிருந்தன. கூரான கத்தி விளிம்புகளில் நகரும் மனிதர்களாயிருந்தோம். எந்தப் பாகுபாடுமில்லாமல் ரவைகள் மனிதர்களைப் பிளக்க உயிரை உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு இருண்டிருந்த வானத்தைப் பார்த்தபடியிருந்தோம். இனி எப்போதும் இருட்டு என் மண்ணில் விதைக்கப்படக்கூடாது என்று பிரார்த்தித்தேன். சாய்ந்தமருதின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சமா