உவேசா எதிர்கொண்ட உள்ளூர் பௌத்தம்
தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு உவேசாவின் சித்திரிப்புகளை ஆதாரமாகக் கொள்வது பற்றிச் சில விமர்சனங்கள் அண்மையில் எழுந்துள்ளன. உவேசாவின் சித்திரிப்புகளை மெய்ம்மையின் நேர்ப் பிரதிபலிப்பாகக் கொண்டால் சிக்கல்தான். எந்தவோர் ஆதாரத்தையும் அதன் சூழலில் பொருத்தி, அதன் சொல்லாடலின் இலக்கணத்துக்கேற்பவே பயன்படுத்த வேண்டும். உவேசாவின் நோக்கங்களுக்கு மாறாக பிரதிலோமமாக reading against the grain) வாசித்தால் மிக அதிக வரலாற்றுப்பயன் உண்டு.
ஆ. இரா. வேங்கடாசலபதி (ப. சரவணன் தொகுத்த உ.வே. சாமிநாதையர் கட்டுரைகள் தொகுதிகளுக்கான முன்னுரை.)
பேராசிரியர் அழகரசன் ‘உட்பகை உணரும் தருணம்’ (2016) என்ற தன் நூலில் மணிமேகலைக் காப்பியம் ஆங்கில அறிவுலகிற்கு மொழிபெயர்க்கப்பட்டதைப் பற்றியும் அங்கு அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் பற்றியும் எழுதியுள்ளார். அக்கட்டுரை மணிமேகலையின் ஆங்கில மொழியாக்க வரலாறு பற்றியதாக மட்டுமில்லாமல் மொழியா