சிற்பி தனபால் நூற்றாண்டு - ஆலைத் தாங்கும் விழுதுகள்
ஓவியக் கல்லூரியில் நான் நுழைந்த வருடம் 1971. அப்போது தனபால் கும்பகோணம் கல்லூரியின் முதல்வர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக கிருஷ்ணாராவ் பொறுப்பில் இருந்தார். மேலும் தனபால் ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி வேறெதுவும் அப்போது எனக்குத் தெரியாது. ஒருவகையில் மாணவராகக் கல்லூரிக்குள் நுழையும்போது ஜனரஞ்சகமான கலைப் போக்கைப் பற்றித்தான் நமக்குத் தெரியும். உதாரணமாக சில்பி, கோபுலு போன்றவர்களைச் சொல்லலாம்.
கல்லூரியில் சேர்ந்த ஒரு மாத காலத்தில், வளாகத்தின் டெக்ஸ்டைல்ஸ் துறையின் மூலையிலிருந்து நீண்ட தாடி வைத்த ஒருவர் கடந்து செல்வதைப் பார்த