எய்தற் கரியது, கடும் புனல்
எய்தற் கரியது
காய்ந்து முற்றிய பஞ்சுக் காயென
வெடித்துச் சிதறுகின்றன சொற்கள்
எடுத்து வரவும்
விட்டுச் செல்லவும் முடியாத
அவற்றை அடைகாப்பதில்
தொலைகிறது ஒரு கனவு
விழிப்பும் உறக்கமும்
சொற்களுடனே.
குழைந்த சொற்களை அடுக்குவதிலும்
அடுக்கியதைச் சரிகாண்பதிலுமாக ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்குள் இழுத்துச் செல்கிறது காலம்!
நிகழ்காலமா
கடந்தகாலமா எதிர்காலமா?
உள்ளங்கையில் பொத்திவைத்து
விட்டெறிந்த பத்துச்சோடி சங்குகளாகச்
சொற்களும் காலமும்.
பிரித்துச் சீராக்கி மீண்டும் அடுக்குகையில்&nb