எம்.எஸ். தாத்தா
தாத்தா... என உச்சரித்து ஓராண்டாகிவிட்டது. என்னை மறந்து தாத்தா என அழைக்கும் போதெல்லாம் இதயம் துடிதுடித்து விடுகிறது. ஆம், இதயத்திற்கு மட்டுமே தெரியும்; என் அன்புத் தாத்தாவின் நினைவுகளை அது பொக்கிஷமாய்ச் சுமந்துகொண்டிருக்கிறது. எம்.எஸ். என எல்லோராலும் அழைக்கப்பட்ட எம். சிவசுப்பிரமணியன் நம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு நிறைவடைகிறது. அவர் மறைந்த அன்றைய தினத்திலிருந்து இன்றைய தினம்வரை ஒவ்வொரு மணித்துளியும் தாத்தாவின் நினைவுகளே என் இதயத்தில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.
தாத்தா இப்போது இல்லை என்பதைக் கனவாகவே கருதி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். தாத்தா மறைந்தபின் அவரின் புகைப்படத்தை என் கைப்பேசியில் முதலில் ப