கடிதக் கருவூலம் - மூலபாட ஆய்வுக்கான உரையாடல்
உ.வே. சாமிநாதையருக்குப் பிறர் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதி (உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1900) ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளிவந்துள்ளது. எண்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த உ.வே. சாமிநாதையர் தமக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். வாய்மொழித் தகவல்களுக்கு இருக்கும் ஆவண மதிப்பையும் தம் அனுபவத்தால் நன்கு உணர்ந்திருந்த
உ.வே.சா. எழுத்துப்பூர்வ ஆவணங்களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமாகவே இந்தக் கடிதப் பாதுகாப்பைச் சொல்லலாம். உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல் பதிப்பாசிரியர் மட்டுமல்ல. வரலாறு எழுதியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். சுயசரிதம், வாழ்க்கை வரலாறுகள் எனப் பலவற்றைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதியவர். அவ்வாறு எழுதும்போது உரிய ஆதாரங்கள் கிடைக்காமல் பல சிரமங்களை அனுபவித்தவர். பதிப்பாசிரியர், வரலாற்றாசிரியர் ஆகிய இருவருக்குமே தகவல்கள் முக்கியமான