ஜேசுதாசன் நூற்றாண்டு நினைவுக் கட்டுரை - கவிதையை ஆராதிக்க வேண்டாம்
கேரளம் பாலக்காடு மாவட்டம் சித்தூரில் ஓடும் சோகநாசினி நதியின் ஒருபுறம் பிரம்மாண்டமான அரசு கலைக் கல்லூரி உள்ளது. அங்கேதான் நானும் ராஜமார்த்தாண்டனும் படித்தோம். சோகநாசினி ஆற்றின் அக்கரையில் சிறிய கிராமம் உண்டு; அதற்குச் செல்ல ஒத்தையடிப் பாலமும் உண்டு. நானும் ராஜமார்த்தாண்டனும் அந்தக் கிராமத்திற்குச் சில சமயம் போவோம். அதன் எல்லையில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. அங்கே சுடச்சுட மீன் பொரித்துப் போடுவார்கள். மார்த்தாண்டன் மீன் பிரியர். கடையைத் தூரத்தில் பார்த்தாலே அவருக்கு நாக்கில் நீர் ஊறும்.
கல்லூரி விடுதியில் இரவில் வாரத்திற்கு இரண்டுநாள் சம்பா அரிசிச் சாப்பாடு. அதற்குத் தொடுகறிக்கு இந்தப் பொரித்த மீன். மார்த்தாண்டன் இதில் கவனமாக இருந்தார். ஒருநாள் பேராசிரியர் ஜேசுதாசன் எங்களிடம், “நீங்கள் இருவரும் அக்கரைக் கடைக்கு மீன் வாங்கத்தான் போகிறீர்கள். எதற்குத் தேவையில்லாமல் கெட்ட பெயர்?r