நாடக எழுத்தில் உச்சம் தொட்டவர்
ந. முத்துசாமியின் மறைவு, தமிழ் நாடக வுலகில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது; உண்மையிலேயே அவரது மறைவு தமிழ் நாடகவுலகிற்கு மிகப்பெரும் இழப்பு என்றெல்லாம் சொல்வது வெறுமனே சம்பிரதாயமான சொற்பிரயோகங்கள்தான். ஏனெனில் தமிழ் நாடகவுலகில் ந. முத்துசாமியின் ‘இருப்பு’ எவ்வாறிருந்தது என்பதை உணரவோ புரிந்துகொள்ளவோ இவை நம்மை இட்டுச் செல்லுமா எனத் தெரியவில்லை.
ந. முத்துசாமியின் மறைவு அச்சு, காட்சி ஊடகங்களின் மிகப்பெரும் கவனத்தைப் பெற்றது. இதனால் தமிழ்நாட்டின் மிக முக்கியமான கலை ஆளுமை ஒருவரின் இழப்பு குறித்த ‘அக்கறை’, ‘சொரணை’ நமது ஊடகங்களுக்கு வந்துவிட்டதென நாம் பெருமிதம் கொண்டுவிட முடியாது. அவரது இறுதி நிகழ்வில் முன்னணி திரைக்கலைஞர்கள் சிலர் கலந்துகொண்டனர். அவரது மரணச்செய்தி ஊடக வெளிச்சம் பெற இதுவே பெரும் காரணமாயிருந்தது. ‘தம்மைப் பயிற்றுவித்த