முறுக்கு மீசை நற்றுணையப்பன்
ந. முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தார். 1968இல் நடை இதழில் வெளியான ‘காலம் காலமாக’ அவரது முதல் நாடகப்படைப்பு. நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், நற்றுணையப்பன், இங்கிலாந்து உட்பட இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இங்கிலாந்து, அப்பாவும் பிள்ளையும், சுவரொட்டிகள், படுகளம் போன்ற பல நாடகங்களை இயக்கியுள்ளார். ‘நீர்மை’ சிறுகதைத் தொகுப்பும், ‘அன்று பூட்டிய வண்டி’ கட்டுரைத் தொகுப்பும் முக்கியமான பங்களிப்புகள். சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற ந. முத்துசாமி 1977ஆம் ஆண்டிலிருந்து நாற்பது வருடங்களுக்கும் மேலாக ‘கூத்துப்பட்டறை’யை நடத்திச் சென்றதைத் தமிழ் நவீன நாடகச் சூழலுக்கு அவர் ஆற்றிய மிக உயரிய பங்களிப்பாக கருதுகிறேன்.
திருச்சி அலைகள் பண்பாட்டு மையத்தில் நாடக ஒருங்கிணைப்பாளராக நான் பண