என்ன சொல்வாய், சுஜாதாவின் இரு நாவுகள்
என்ன சொல்வாய்
பலரும் பலமுறை
பழகிய பாதைதான்
இருளும் ஒளியும் கடக்க இயலாத
தகிப்பில் வெதும்பிய
முத்த நிலக்காட்சிகளும் நமக்குப் பழகியவைதான்.
வெள்ளிகள் நிறைந்த அந்த வானும்
பாழடைந்த பாலமும்
படிக்கட்டுகளில் கனன்றுகொண்டிருக்கும்
வெப்பமூச்சுகளும்
அதனடியில் கசட்டுநீரில் மங்கலாகவேனும் மிதக்கும்
நிலாக் கனவுகளும்
பலநூறு நகரங்களில் பதிந்தவைதான்.
ஆனால்
நீ பேசுகையில்
இமைகளில் புதிதுபுதிதாய் இழையும்
கருந்தேன் இரகசியங்களின்
குடைராட்டின வர்ணங்களால் எப்போதும் அதிசயித்து
கிறுகிறுத்துக்கொண்டிருக்கும் குழந்தை நான்
என்பவளிடம் என்ன சொல்வாய் தோழனே?
சுஜாதாவ