பரியேறும் பெருமாள்: தமிழ்த்திரையில் தெற்கு
'பரியேறும் பெருமாள்’ படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுவந்த தருணத்தில் ஒரு பாராட்டு கூடுதல் கவனத்தை ஈர்த்தது. நடிகர் கமலஹாசனின் பாராட்டு அது. இயக்குநரோடும் தயாரிப்பாளரோடும் அவர் நின்றிருந்த புகைப்படம் தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் காலமாற்றத்தையும் உள்ளடக்க மாற்றத்தையும் காட்டுகிற குறிப்புப்போல தோன்றியது. தமிழ் சினிமா கட்டமைத்து வந்த தெற்கு பற்றிய எதார்த்தத்தைப் புதிய மொழியில் பரியேறும் பெருமாள் எதிர்கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் ‘தேவர் மகன்’ படத்தை நினைவுகொள்ளாமல் பரியேறும்பெருமாளைப் பேசிவிட முடியாது. இது குற்றச்சாட்டோ பழிவாங்கலோ அல்ல. தமிழ்வாழ்வின் உள்ளார்ந்த எதார்த்தங்கள் சினிமா என்னும் புனைவு மூலம் எவ்வாறு மூடப்பட்டுக் கிடந்தன என்பதை அறிய வேண்டும். 1980களில் வெளியான ‘மண்வாசனை’ படம் இனவரைவியலின் அழுத்தமான பதிவு என்றால் அவற்றைச் சாதியப் பெருமிதத்தோடு இண