மீட்கப்பட்ட செப்புச்சிலைகள்
சாராபாய் அருங்காட்சியகத்திலிருந்த ராஜராஜசோழன், லோகமாதேவி என்றறியப்படும் இரு செப்புப்படிமங்களைச் சுமந்துவந்த தொடர்வண்டி சென்ற மே மாதம் 31ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது 10ஆவது நடைமேடை ஒரு சன்னதித் தெருபோல காட்சியளித்தது. சங்கு முழங்க, நாதசுவரமும் பஞ்சமுக வாத்தியமும் இசைக்கப்பட, படிமங்கள் வெளியே எடுத்து வரப்பட்டன. சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டபோது புரோகிதர்கள் தேவாரம் ஓதினர்.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான செப்புச்சிலைகள் அழிக்கப்படவில்லை; ஆனால் நம் நாட்டினுள் வெவ்வேறு நகரங்களுக்கும் உலகில் பல இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு நம் பார்வையிலிருந்தும் நினைவிலிருந்தும் மறைக்கப்பட்டன. கலைப்பொர