அலையும் கரையும்
தமிழ் சினிமா இரண்டாயிரத்துக்குப் பிறகு என்னவாக மாறியிருக்கிறது என்று யோசிக்கிற வேளையில் அதற்கு அணுக்கமாக இருக்கும் மொழிகளில் சினிமா என்னவாக ஆகியிருக்கிறது என்று பார்ப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். தெலுங்குப் படங்களின் உள்ளடக்கத்தில், நோக்கில் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருப்பதாக நான் எண்ணவில்லை. இன்னமும் அங்கே அர்ஜுன் ரெட்டி போன்ற மாச்சோ ஆண்கள் உலவுகிற படங்கள்தான் ‘நல்லபடங்கள்’. ராம்கோபால் வர்மாவின் ‘சத்யா’, ‘உதயம்’ தொடங்கிய அலையின் நீட்சியாகவே என்னால் இவற்றைக் காண முடிகிறது. கன்னடத்தில் விஷயம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ‘லூசிய’, ‘திதி’, ‘நான் அவனல்ல அவளு’ போன்ற
படங்கள் ஒரே நேரத்தில் பாக்ஸ் ஆபிஸையும் விமர்சகர் கருத்தையும் கவர்ந்தன. ஆனால் கன்னடத்துக்கு, முன்பே இப்படி ஒரு பக்கவாட்டு சினிமாவின் பாரம்பரியம் உண்டு.