தமிழ் சினிமா காலமும் கோலமும்
என்னுடைய அம்மா நூற்றாண்டைக் கடந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. அநேகமாக ‘1950களில் தமிழ்ப் படங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். ஏழை படும் பாட்டில் வி. நாகையா ,ஜாவர் சீதாராமன் ஆகியோருடைய நடிப்பாற்றலை விவரிப்பதையும், ‘வாராய் ..நீ வாராய்’ என்று கபடத்தனத்துடன் பாடிக்கொண்டே நடராஜன் மந்திரிகுமாரியை மலையுச்சிக்கு வழி நடத்திச் செல்லுவதைக் கூறுவதையும், ‘ராஜன் வருவாரே..’ என்று கிணற்றுக்குள்ளிருந்து எதிரொலிக்கும் ‘சர்வாதிகாரி’ படப் பாடல் [பாடலின் தொடக்கம்: கண்ணாளன் வருவார்] பற்றிக் கூறுவதையும், ‘வஞ்சிக்கோட்டை வாலிப’னில் வைஜயந்திமாலாவும் பத்மினியும் நடனப் புயல் எழுப்பும் ‘கண்ணும், கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே’ காட்சி பற்றிச் சொல்லுவதையும் கொட்டும் மழையில் ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே’