தமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்தில்
கோடம்பாக்கம் வெகுகாலம் தமிழ் சினிமாவின் முகவரியாக இருந்தது. அதன் காரணமாக அது இன்னமும் கோலிவுட் என்றழைக்கப்படுகிறது. ஆனால் படங்களில் வெளிப்புறக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறத் தொடங்கிய எழுபதுகளிலேயே கோடம் பாக்கத்தை விட்டுத் தமிழ் சினிமா மெல்லமெல்ல வெளியேறத் தொடங்கியது. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு அது கோடம்பாக்கத்தை முற்றாகவே துறந்தது.
தமிழ் சினிமா, கோடம்பாக்கத்து சினிமா-கோடம் பாக்கத்துக்குப் பிந்திய சினிமா என்பதாகப் பிரிவுகள் கொண்டுள்ளது. டிஜிட்டல் சினிமா கோடம்பாக்கத் துக்குப் பிந்திய சினிமா. பாரம்பரியமாக சென்னை நகரம் திரைப்படத்திற்கான தொழில்நுட்பம், கலைஞர்கள் வாழ்விடம், அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஆ