பழுப்பு நகரம்
1
சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக இங்கு நான் எங்கள் நகரம் என்பதை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன் அல்லது சுவீகரித்துக் கொண்டேன் என்பது மிகுந்த குழப்பகரமான ஒன்று. வங்கக் கடற்கரையில் நடந்து கடல் நகரம் ஒன்றை அடைந்துவிடுவது அல்லது வறண்ட காடுகளில் புகுந்து செழிப்பான பாலைமரக் காடுகளுக்குள் புகுவதைப்போன்ற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருக்கிறது. நகரத்துக்கூடாய்க் கடந்துபோய் வேறொரு நகரத்தை அடைந்துவிடுதல்தான் என் முழுமையான திட்டம்.
2
சந்தடியான அந்த நகருக்குள் நுழைந்தபோது என்னைப் பற்றிய எந்த ரகசியத்தையும் கசிய விட்டுவிடுவதில்லையென ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். நகரில் வசிப்பதற்கான தயாரிப்புகள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஒரு திருடனைப்போல் இந்த நகரினுள் நுழைந்திருந்தேன். நுழைந்த சில கணங்களில் பாதிரியொருவன் ‘இந்த நகரத்திற்கு நீ புதிதானவனாய் இருக்கிறாய், இந்த நகரம் உனக்குப் புதிய ஆசுவாசத்தைத் தரட்டும்; அவன் உன் ஜீவனாய் இருக்கிறான். அவன் ஜீவன் இந்த நகரத்தின்