அவமானம், ஒரு குடிமகனின் குறிப்புகள் , தளும்பும் கணம்
அவமானம்
அந்தச் சொல் தலைக்குள் விழுந்து
முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது
துடிதுடிக்கத் திமிறி இறங்கிய பின்
பரிகசிப்பில்
அழுதழுது கண்துடைத்துக்கொண்டது இதயம்
கற்பிதமென்றாலும் சிருஷ்டியைப் போல்
துக்கத்தின் விஷமாகி நின்றதென் எதிரில்
வதம் செய்யும் நினைவுகள்
மண்டியிட வைத்துக்கொண்டேயிருந்தன
தேவனின் சந்நிதியில்
விதிர்த்தெழவைத்துக்கொண்டிருந்த அந்தத் துர் கனா
காலத்தின் கருணையினால்
வடு துடைத்து மறைந்தது நேற்று
பரவசத்தின் நற்கணங்கள் நிறைந்த
என் இன்றைய குவளையில் நிறைந்திருக்கிறது
அமுதம்.
இந்த நட்ட நடு இரவில்
உன் அறைக்கதவைத் தட்டி எழுப்பியிருக்கக் கூடாதுதான்<