திரையில் பால்புதுமையினர்
இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலான சமயங்களில் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட அல்லது விளிம்புநிலை மனிதர்கள் மீதான அக்கறையுடன் செயல்படுவதில்லை. சாதிரீதியாக ஒடுக்கப்படுபவர்கள், பாலினம், பாலீர்ப்பு காரணமாக ஒடுக்கப்படுபவர்கள், பொதுச்சமூகம்வகுத்த அழகு எனும் வரையறைக்குள் அடங்காதவர்கள் என அனைவரையும் கிண்டல் செய்வதற்குத் தகுதியானவர்களாகவே முன்னிறுத்தி இருக்கிறது.
பாலினம், பாலீர்ப்பு காரணமாக ஒடுக்கப்படும், உரிமைகள் மறுக்கப்படும் மக்கள் தொடர்பான திரைப்படங்கள் எந்த அளவிற்கு வெளியாகின்றன என்பதை யோசிக்கும்போது பெரிய அளவில் ஏதுமில்லை. பால்புதுமையினரை (Queer) முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டிருக்கும் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை; எனினும் குறைந்தபட்சம் அவர்களைச் சராசரி மனிதர்களாகக் காட்டும் திரைப்படங்கள், நகைச்சுவைக்காக அல்லாமல் பயன்படுத்தும் திரைப்படங்களாக இருக