இராப்பாடி
பொய்களை ஆடையாய் உடுத்தித் திரியுமொருத்தி
தன் காமக் கண்களால் உலகை விரிக்கிறாள்
உலகம் தான் கண்டெடுக்கும்போது சிறியதாய்
இருந்ததென்றும்
சல்லாபத்தில் அயர்ந்திருக்கையில்
அவன் திருடிக் கொண்டுசென்றுவிட்டதாய்ப் பகரும் அவள்
இராக்காலங்களில் நிலவோடும் இருளோடும்
உரையாடிக் கொண்டிருப்பதாய்
அனைவருக்கும் செய்தி அனுப்புகிறாள்
உதிரும் மலர்கள் துர்கந்தமடிக்கின்றன
செருக்குற்றுத் திரியும் விழிகளில்
மின்மினிப் பூச்சிகள் ஒளி உமிழ்கின்றன
காமத்தின் உமிழ்நீர் எங்கும் பிரவகிக்க
காக்கைகளும் கோட்டான்களும் இரையை யாசிக்கின்றன
மொழி உணர முடியாத அவளின் பாடல்
ஏகாந்தத்தில் கரைந்தபொழுது
மீண்டுமொருமுறை உலகம் இருளில் மூழ்கியது
பாடலின் சொற்கள் பாசியெனப் படர்கின்றன
ஏகாந்தத்திலிருக்குமொருவன் ஏதோ
முணுமுணுத்துக்கொண்டே செல்கி