ஆண் வாசனை
அவன் வாசனைகளின் வழியே
ஆண்களை உணர்ந்து கொள்பவனாய் இருந்தான்..
அவனது ஒவ்வொரு காதலனுக்கும்
அவன் சந்தித்த ஒவ்வொரு ஆணுக்கும்
தனித்தனி வாசனைகள் இருந்தன..
அல்லது அவன் அவர்களுக்கான
வாசனைகளை
உருவாக்கி வைத்திருந்தான்..
அவனது முதல் காதலனுக்கு
சீம்பாலின் வாசனை இருந்தது..
அவனுக்கு சீம்பாலைப் புரியவைப்பதில்
பலநாள் சிரமப்பட்டிருந்தான்..
இரண்டாவது காதலன் மிகவும்
சுத்தமானவனாக இருந்தான்..
அடுக்கிவைத்தப் பொருட்களைத்
தொடுவதைக்கூட குற்றம் கூறிக்
கொண்டிருக்கும் அவன்
தினமும் இருமுறை குளித்து
உடைமாற்றுபவனாக இருந்தான்..
அவனது உடலிலிருந்து எப்போதும்
நீரில் ஊறிய தென்னை ஓலையின்
வாசனை வந்துகொண்டிருந்தது..
மூன்றாவது காதலன் வாசனைகளை
மறைப்பவனாக இருந்தான்..
அவனுக்கான வாசனைகளைத்
த