Tamil Font Problem?

Google   www kalachuvadu.com

இதழ் 98, பிப்ரவரி 2008

டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு இடம் பெறுகிறது

பிரகதி மைதானம்
ஹால் எண்: 12
கடை எண்: 60
2.2.2008 முதல் 10.2.2008 வரை
தொடர்புக்கு: 09367511084, 09443315279

 

     

ஆவணம்: ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளம்
த. உதயச்சந்திரன், IAS  | உலகெங்கிருந்தும் தமிழகத்தை நோக்கிப் பிற நாட்டவர்களின் கவனத்தைத் தைத்திங்களில் குவிக்கவைக்கக்கூடிய முக்கியத் திருவிழா ஜல்லிக்கட்டு. மனிதநேயத்தையும் பலதரப்பட்ட மக்களின் பண்பாட்டையும் அறிய விரும்பும் பிறநாட்டு மக்களின் வருகையைத் தொடர்ந்து உறுதிப்படுத்திவருகிறது இவ்விளையாட்டு.

கட்டுரை: மரபை நினைவூட்டும் ஒரு கலை விழா (சென்னை சங்கமம்)
செல்லப்பா | நாட்டுப்புறப் பாடல்களின்வழி வெளிப்பட்ட தமிழகக் கலாச்சாரக் குரல்களின் ஒலியில் வெளி நிரம்பியது. கலைஞர்களின் கடின உழைப்போடு நேர்த்தியான ஒத்திகைத் திறனும் சேரும்போது நிகழ்த்தப்படும் கலையானது உச்சத்தைத் தொடும் என்பதை நிரூபித்தது 'ஞாயிறு போற்றுதும்'.

கலகக்காரர்களின் கால்வழி மரபு
டி. தருமராஜன் | ஐரோப்பிய மிஷனரிமார்களின் மதத்தைத் தழுவினால் அரசியல் ஆதாயங்கள் உண்டு என்ற நப்பாசையில் மட்டுமே மதம் மாறியிருந்த பிராமணர்கள், அந்த மிஷனரிகள் திடீரென்று காணாமல்போன பதினெட்டாம் நூற்றாண்டில் மீண்டும் பழையபடி இந்து மதத்திற்குத் திரும்பிவந்தார்கள் என்பதும் உண்மை.

சிறுகதை: புவியீர்ப்புக் கட்டணம்
அ. முத்துலிங்கம் | அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்து கொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்ட வேண்டுமென்றால், எப்படி?

பத்திரக்குழாய்
சந்ரு | பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பத்திரக்குழாயில் உள்ள வீட்டுப் பத்திரங்களிலும் துண்டுச் சிட்டைகளிலும் என்னென்ன விவரம் எழுதியிருக்கிறது என்பதை அறியோம். இதற்கு எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாத பருவத்தையும் வாசித்து அறியவேண்டுமென்ற அவா இன்மையையும் குறிப்பிடலாம்.

கவிதைகள்:
கருணாகரன்

 
பத்திரக்கோட்டை: தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை
ஸ்டாலின் ராஜாங்கம் | படம் எடுப்பதோடு மட்டும் தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்கிறவர் அல்ல தங்கர்பச்சான். தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சாரம், மக்களின் வாழ்நிலை குறித்தெல்லாம் கருத்துக் கூறுவதோடு அவை தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்டுபவராகவும் இருக்கிறார்.

சிறப்புப் பகுதி
அஞ்சலி: ஆதிமூலம்
மறைந்தும் மறையாத ஆதிமூலம்

ந. முத்துசாமி | ஒரு சமூகத்தில் வளங்களைச் சேர்க்கிறவர்கள் மிகவும் முக்கியமானவர்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானவர் ஆதிமூலம்.

ஆதிமூலம் தமிழ்க் காண்பியல் மரபின் நவீன அடையாளம்
டிராட்ஸ்கி மருது | அவருடைய சமகாலத்தில் நடந்த இலக்கியப் பரிட்சார்த்தங்களுக்கு உருவகமாகவும் அடையாளமாகவும் இருக்கிறது அவருடைய ஒவ்வொரு கோடும். சமகாலப் படைப்பாளிகளுக்கு அவர் எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருந்துவந்திருக்கிறார்.....

வாழும் கலைஞன்
சா. கந்தசாமி | தான் அரூபமாகக் கண்டதைக் காட்சிப்படுத்துவதில் ஆதிமூலம் மனத்திண்மையுடன் உழைத்தார். தன் படைப்புமீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டு இருந்தார். தன் கலை கோட்பாட்டை தன் மரபு, ஐதீகம் - என்பதின் வழியாகவே கண்டு பின்பற்றினார்.

பத்தி:
அரபிக் கடலோரம்
மலையாளம், மலையாளி - ஓர் எச்சரிக்கை

சக்கரியா | கேரளத்துக்குள்ளே மலையாளிகளுக்கு விருப்பமான ஒரு பொருளாதார நிலை இல்லாமல் போயிற்று. அரசியலால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள்
தொழிற்சாலைகளையும் பொருளாதார முயற்சிகளையும் திட்டமிட்டுக் கவிழ்த்தன.

பத்தி:
பிறவழிப் பயணம்
விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!

ரவிக்குமார் | ரிஷி வாலியில் பயன்படுத்தப்பட்டுவந்த முறையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் தமிழகக் குழுவினர் அதை அற்புதமாக மேம்படுத்திவிட்டனர். ஆங்கிலம்
பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும்....

   
தலையங்கம் | கடிதங்கள் | நீல. பத்மநாபனுக்கு சாகித்திய அகாடமி விருது
மதிப்புரை | பதிவு: சென்னைப் புத்தகக் கண்காட்சி