|
கவிதைகள்
சின்னசாமி
மனப்படுகை
கதறும் அங்கத்தினர்களுக்குத் தாயாக,
விடமாய் உள்ளதென
பாலருந்தியவர்கள் புலம்புகிறார்கள்
மலர்களால் வாசம் வீசும் அகப்பை,
சேற்றுக் குளத்துத் தாமரையை
சிதைத்துத் துப்பப்
பாயும் எருமைகள்.

கால்கள் பிணைத்த சிலம்புகள்
சிதறும்போது சிலதூரம் நடக்கலாம்.
மார்பழுத்தும் வண்ணப் பதக்கங்கள்
மரிக்கும்போது உயிர்ப்பிக்கப்படலாம்.
மனிதனாவதற்கு
இதயங்கள் கொல்லப்பட வேண்டும்
மூளை செயலற்றுப்போனால்கூடப்
பரவாயில்லை.
எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்
எப்போது என்னைப் புதைப்பீர்கள்.
உள்ளடக்கம் |