Google   www kalachuvadu.com

 

நகுலன் கவிதைகள்

ஒரு குரல்

பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்து
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.

n

அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

நன்றி: நகுலன் கவிதைகள்
காவ்யா வெளியீடு

உள்ளடக்கம்

Google Ads.....


Google