Google   www kalachuvadu.com

இலக்கியத் தரம் உயர

விமரிசகர்களும் வாசகர்களும்தான் இலக்கியத்தில் நல்ல அம்சங்கள் பற்றிய வரையில் முக்கியமானவர்கள்.

இலக்கியத்தரம் உயர . . . என்கிற பிரச்னைக்கு ஒரு பதில்தான் உண்டு - அது விமர்சகர்கள், வாசகர்கள் என்கிற சூத்திரத்திலேதான் அடங்கி இருக்கிறது.

தரம் அறிந்து விமரிசனம் செய்பவர்கள் சிலரும், தரம் அறிந்து படிக்கத் தெரிந்தவர்கள் ஒரு இரண்டாயிரம் பேரும் எந்த இலக்கியத்திலும் தரம் உயர அவசியமாகிறார்கள். பிரபலஸ்தர்களின் பாராட்டுகள் தேவையில்லை; சாஹித்திய அக்காதெமிக்காரர்களின் பரிசுகளோ, பதவிச் சிபாரிசுகளோ தேவையில்லை. அகில இந்திய ரோடியோ (ரோடியோ என்பது ஒரு சர்க்கஸ் விளையாட்டு)வின் சாஹித்திய சமாராதனைகளோ, தயாரித்தளிக்கும் அதிமேதாவியார்களோ தேவையில்லை. இலக்கியத்தரம் உயர விமரிசகர்களும் வாசகர்களும் போதும்.

இருவரும் தரம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் - இலக்கியத்தில் ஒரு பயிற்சியை, தேர்ச்சியை, ஒரு முயற்சியை மேற்கொள்ள ஆவலும் ஆர்வமும் காலமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு ஜாதியைத் தமிழிலே தோன்றச் செய்வதற்காகவே இலக்கிய வட்டம் உருவெடுக்கிறது என்று உண்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலக்கிய வட்டம் முதல் தலையங்கத்திலிருந்து
28.11.63

உள்ளடக்கம்