Tamil Font Problem?

Google   www kalachuvadu.com
 

இதழ் 115, ஜூலை 2009

 

இந்த இதழின் உள்ளடக்கம் ஜூலை 10ம் தேதி வலையேற்றம் செய்யப்படும்,

 

கட்டுரை: வன்முறையின் விரிந்த பரப்பு: கிராமக் கோயில்கள்
ஸ்டாலின் ராஜாங்கம்
திருவிழாக்களையும் வழிபாட்டு உரிமைகளையும் தீர்மானிப்பதில் சாதிய மேலாதிக்கமே முதன்மையான பங்குவகிக்கிறது. சாதிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் ஏற்ற வகையிலேயே சடங்குகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

கட்டுரை: வன்னிக் குறிப்பேடு - “தேசப்பற்றுள்ளோர், தேசப்பற்றில்லாதோர்”
அநாமதேயன்
உண்மையில் ஒரு மாபெரும் மக்கள் சக்தி ஆயுதங்களுக்குப் பயந்தல்ல, உணர்வுபூர்வமாகவே பிரபாகரனுக்குப் பின்னால் திரண்டிருந்தது. ஆனால் பிரபாகரன் எல்லா விதத்திலும் தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தது மட்டுமல்லாமல் தமிழீழப் போராட்டத்தையே அர்த்தமற்றதாக்கித் தமிழ் மக்களை வகைதொகையின்றிப் பலியிட்டு வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான சர்வாதிகாரியாகிவிட்டார்.

கட்டுரை: மஹாவம்சம்: பேரினவாதப் பிரதி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சிங்களப் பேரின வாசிப்புப்படி மஹாவம்சம் இலங்கையை ஒருபோதும் ஒற்றைச் சமய, ஒற்றை இன, ஒற்றை மொழி நாடாகப் பார்க்கவில்லை. பல இனத்தவரும் பல்லினச் சமயத்தவர்களும் வாழ்ந்த பூமியாகத்தான் வர்ணிக்கிறது.

கட்டுரை: “வேறு வழியில்லை அக்கா”
கவிதா
இலங்கைக்கு நான் மேற்கொண்ட இந்த இரண்டாம் பயணம் போருக்குப் பிந்தையது. நவம்பரில் நான் சென்றபோது தமிழர்களிடமிருந்த நம்பிக்கையும் தைரியமும் இப்போது முற்றாக அழிந்துபோயிருந்தன.

அஞ்சலி: பேரன்பு, அமைதி, உறுதி
கண்ணன்
சில வாரங்களுக்கு முன்னர் ராஜமார்த்தாண்டனை பல நாட்கள் அலுவலகத்தில் காண முடியவில்லை. நெடுக குடித்துக்கொண்டிருப்பதாகவும் காரணம் பிரபாகரனின் மரணம் என்றும் அறிந்தபோது வியப்பாக இருந்தது. இவ்வுணர்வை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் ராஜமார்த்தாண்டன் என்னிடம் வெளிப்படுத்தியதில்லை.

அஞ்சலி: ராஜமார்த்தாண்டன் - பல நினைவுகள்
ப. கிருஷ்ணசாமி
பாண்டித்தமிழராக இருந்தாலும் பூஞ்சையான உடம்பும் மென்மையான சுபாவங்களும் கொண்டவர். எந்தக் குற்றத்தையும் மன்னித்து மறந்துவிடக்கூடியவர். காசு பணத்தில் நம்பிக்கையில்லாதவர். வேறுபாடில்லாத நட்புப் பேணுபவர்.

அஞ்சலி: மழைக்காலத்தில் சந்தித்த மார்த்தாண்டன்
அ.கா. பெருமாள்
நான் மார்த்தாண்டனைச் சந்தித்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான். அவரது உடல் தோற்றத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் சு.ரா. கிராமத்து ஆளு. நல்ல உடம்பு. மெஷின் நல்லா ஓடுது. நாசமாக்கணும்னுன்னு திட்டம்போட்டா என்ன செய்ய முடியும் என்பார்.

அஞ்சலி: வாழ்வை நிரப்பிய இலக்கியம்
சுரேஷ்குமார இந்திரஜித்
ராஜமார்த்தாண்டன் தன்னம்பிக்கை குறைந்தவராகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். அவர் முதல் வரிசையில் அமர நினைக்கும் மனநிலை கொண்டவரல்ல. இறுதி வரிசையில் அல்லது முடிந்தால் பார்வையில் படாத இடம் இருக்குமானால் அந்த இடத்தில் அமரக்கூடியவர்.

அஞ்சலி: எனக்கெ அண்ணாச்சி
சுகுமாரன்
அண்ணாச்சி கவிதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். எனினும் அவரது முதன்மையான இலக்கியப் பங்களிப்பு விமர்சனம் சார்ந்ததுதான். குறிப்பாகக் கவிதையியல் சார்ந்தது.

கவிதைகள்
ராஜமார்த்தாண்டன்
கமலாதாஸ்

அஞ்சலி: ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 - 25.5.2009) - “முன்னோடி, பின்னோடி என்பதற்கு என்னிடம் ஏதுமில்லை”
சந்ரு
“பருவத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்கிறாய், இதுவே நீ மிகச் சிறந்த ஓவியனாக வருவதற்கான அடையாளம்”

அஞ்சலி: இரா. திருமுருகன் (1929 - 3.6.2009) - தொடர்ச்சியான புலமைப் பங்களிப்பு நுட்பமான இலக்கண நோக்கு
ய. மணிகண்டன்
தமிழ்கூறு நல்லுலகத்திலேயே யாப்பியலும் இசையியலும் ஒருசேர அறிந்தவராகவும் இருதுறைகளையும் ஒன்றுக்கொன்று பயன்படுத்தி ஆராய்ந்தவராகவும் நம் காலத்தில் விளங்கியவர் இரா. திருமுருகன் ஒருவரே.

அஞ்சலி: லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (1925 - 12.6.2009) - தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி
சா. கந்தசாமி
வாசகர் வட்டம், தமிழ்ப் புத்தகங்களில் தரம் என்பதிலும் தயாரிப்பில் முதன்மை என்பதிலும் கவனம் செலுத்தியது. அதை உருவாக்கிய லட்சுமி கிருஷ்ணமூர்த்தி ஜீவிதமாக இருக்கிறார்.

அஞ்சலி: கமலாசுரய்யா (31.3.1934 - 31.5.2009) - சஞ்சாரி பாவம்
உண்ணி ஆர்
தமிழில்: என்னெஸ்

மாதவிக்குட்டியின் ஸ்தாயி பாவம் அன்பாக இருந்தது. அவர் மாதவிக் குட்டியிலிருந்து கமலாதாஸுக்கும் அதிலிருந்து கமலாசுரய்யாவுக்கும் சஞ்சாரம் செய்தார்.

அஞ்சலி: ஹபீப் தன்வீர் (1.9.1923 - 8.6.2009) - எனது ஊர் அரங்கம்; என் பெயர் ஹபீப்
சண்முக ராஜா
ஹபீப்பின் நாடகங்களில் இசையும் கவிதையும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. ஒவ்வொரு நாடகத்தையும் சத்தீஸ்கர் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து அவர் வடிவமைத்திருந்த விதம் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது.

சிறுகதை: பெயரிடப்படாத சம்பவம்
எஸ். செந்தில்குமார்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்

தம்பு போன பிறகு உன்னிப் பூக்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஜித்துவை இழுத்து அணைத்தவளாக உதடுகளில் முத்தமிட்டாள் செல்லி. அவள் ஜித்துவையும் கல் மரத்தையும் பிற்பகல் நேரத்திலிட்ட முத்தத்தையும் மறந்துவிட்டவள் போல இருந்தாள்.

பத்தி: வேறுவேறு - கருணை வெளிப்படும் தருணம்
பெருமாள்முருகன்
கல்வி மலரில் பெரும்பான்மை விளம்பரங்களுக்கிடையே கல்வி தொடர்பான சில கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கும். எந்தெந்த நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்துள்ளனவோ அவற்றைப் பற்றி மட்டுமே செய்திக் கட்டுரைகள் இருக்கும். இரண்டையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் பார்வை கொண்டவரல்ல வாசகர் என்பது அவர்களுக்குத் தெளிவு.

மதிப்புரை: குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
களந்தை பீர்முகம்மது

மதிப்புரை: கவி, என்ன பாடினாலும் ...
க. மோகனரங்கன்

பதிவுகள்: ராஜமார்த்தாண்டன் இரங்கல் கூட்டம் நாகர்கோவில்
எஸ்.வி. ஷாலினி

ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் சென்னை
பெ. பாலசுப்ரமணியன்

அற்றைத் திங்கள், மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்

எம்.எஸ். எண்பது ஆண்டு நிறைவு பாராட்டுவிழா, மே 15, 2009, நாகர்கோவில்
மா. சுப்பிரமணியம்

சு.ரா. பக்கங்கள்: “தனியாக விடுக்கச் செய்தி ஒன்றுமில்லை” - சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்காணல்
படைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவற்றைப் பரிசீலனை செய்யும்போது ஒரு சிலவற்றை ஏற்க முடியாமல் போகிறது. ஏற்க இயலாது போகிறவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இதழோடு ஒத்துழைக்க மறுத்து விரோதபாவம் கொள்கிறார்கள். நான் எதிர்கொண்ட சிரமங்களில் மிக முக்கியமானது இதுதான்.

தலையங்கம்

கடிதங்கள்